அனகோண்டா வகை பாம்புகள் மிகவும் ஆபத்தான மற்றும் அச்சுறுத்தும் வகையைச் சேர்ந்த பாம்புகள் ஆகும்.

நீர் நிலைகளிலேயே வாழும் தன் இரையைப் பிடியில் இறுக்கிக் கொன்று உட்கொள்ளும். இப்படி அச்சமூட்டும் அனகோண்டாவைக் கையில் பிடிக்கும் வகையில் 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ இப்போது வைரலாகி இருக்கிறது

இதுகுறித்து “டெய்லி மெயில்” வெளியிட்டுள்ள செய்தியில் பிரேசில் நாட்டின் சாண்டோ மரியா எனும் ஆற்றில் சிர்லேய் ஒலிவிரியா, அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ் மற்றும் நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்று கொண்டிருக்கும் போது சுமார் 17 அடி நீளமுள்ள அனகொண்டா பாம்பு தென்பட்டுள்ளது.

அதன் வாலைப் பிடித்து போர்க்ஸ் இழுத்துள்ளார். இந்தச்சூழ்நிலையில் அனகோண்டாவைப் பிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட, அவர்களின் படகு தாறுமாறாகச் சுழன்று செல்கிறது. போர்க்ஸின் மனைவி ஒலிவிரியா பாம்பை விட்டுவிடுமாறு கதறுகிறார்.

ஒரு கட்டத்தில் போர்க்ஸின் பிடியிலிருந்து அனகோண்டா நழுவி செல்கிறது. இதனை தற்போது மீண்டும் இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

By admin

You missed