கடந்த வாரம் முழுவதும் அதிகமாக இணையத்தில் பேசப்பட்ட விஷயம் என்றால் அது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண விஷயம்தான்.நயன்தாராவின் திருமணம் முடிந்த போது எந்த அளவிற்கு வாழ்த்துக்கள் குவிந்ததோ அதே அளவு சர்ச்சைகளும் கிளம்பியிருந்தது.

அந்த வகையில் மருத்துவர் ஒருவர் போட்ட பதிவு ரசிகர்களிடம் கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.அதாவது, நயன்தாராவின் நடிப்பு திறமையை நான் மதித்தாலும், 40ஐ நெருங்கி பாட்டி வயதில் இவர் எப்படி குடும்பம் குழந்தையை பெறப்போகிறார் என்று பாவமாக இருக்கிறது.

செயற்கை கருத்தரிப்பு மையம் (IVF ) இவருக்கு உதவும் என்று நம்புகிறேன் என்று மோசமாக விமர்சித்திருந்தார்.இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அந்த மருத்துவரை திட்டி தீர்த்து இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் தனது பதிவுக்கு மன்னிப்பு கேட்டுள்ளதுடன், ஏன் அப்படி பதிவிட்டேன் என்றும் அந்த மருத்துவர் பதிவிட்டுள்ளார்.

முதலில் அனைவருக்கும் என்னுடைய மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்னுடைய சக மருத்துவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது எதார்த்தமாக பதிவிட்ட பதிவுதான் அதுவே தவிர யாரையும் காயப்படுத்த அல்ல.

என்னுடைய கருத்திற்கு முக்கிய காரணம் பொதுவாக 30 வயதைக் கடந்தாலே பெண்ணின் கருமுட்டை பலவீனமடையும். நாங்கள் மருத்துவர்கள் அனைவரும் ஜோதிகாவின் புத்திசாலித்தனமான முடிவை பாராட்டியிருந்தோம்.

அவர் மிகவும் புத்திசாலித்தனமாக ஐந்து ஆண்டுகள் சினிமாவில் பிரேக் எடுத்துக்கொண்டு தங்கள் குழந்தையையும் குடும்பத்தையும் வளர்த்து வந்தார்.

நானும் நயன்தாராவின் ரசிகன் தான். அதனால் தான் அவர் மீது கொண்ட அக்கறையால் காலம் கடந்த திருமணம் மற்றும் குழந்தைகள் குறித்து அவ்வாறு சொன்னேன்.

இருப்பினும் நான் மீண்டும் ஒருமுறை நயன்தாரா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அதேசமயம் ஒற்றை கமெண்டை எடுத்துக்கொண்டு யாரையும் மதிப்பிட வேண்டாம் என்று சின்மயி போன்ற நபர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் சொன்னது போல நான் அவ்வளவு வில்லன் கிடையாது என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

By Spyder

You missed