உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் கொரோனா பா திப்பு நாட்கள் செல்ல செல்ல அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அந்த நாடுகள் ப திப்பினை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்காக ஊரடங்கை செயல்படுத்தி பரவாமல் பாதுகாத்து வருகிறது. தற்போது இந்தியாவில் மூன்றாவது நிலை ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.
மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவே வெளியில் வர முடியாத சூழல் இருந்து வருகிறது. மேலும் லாக்டவுனால் சினிமாத் துறையில் இருக்கும் அனைவரும் பாதித்து வரும் நிலையில் படப்பிடிப்பு துவங்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு திருமணம் செய்துள்ளார்.
ஏற்கனவே அனிதா காரு என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் தில் ராஜு. சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்துள்ளார் அனிதா காரு. இதனால இரண்டாம் திருமணம் பற்றி யோசித்து வந்த தில் ராஜு, தேஜ்ஸ்வனி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
குறிப்பிட்ட உறவினர்கள், நண்பர்கள் ஆசியுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது 50 வயதில் குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்யலாமா என்று பலர் கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.