23 வயது நடிகை ஒருவர் தனது காதலனுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அந்த வீட்டில் இளம் நடிகை இ ற ந்து கிடந்தது பொழுதுபோக்கு துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள நயபள்ளி பகுதியில் இந்த அ தி ர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நடிகை ரஷ்மிரேகா ஓஜா ஒடியா தொலைக்காட்சி தொடரான ‘கெமிட்டி கஹிபி கஹா’ மூலம் புகழ் பெற்றார். ஜூன் 18-ஆம் தேதி, அவர் ஃபோனை எடுக்காததால் அவரது பெற்றோர்கள் கவலைப்பட்டனர்.
அப்போது தான், சந்தோஷ் பத்ரா, ரஷ்மிரேகாவின் ம ர ணம் குறித்த அ தி ர் ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பிறகுதான், ரஷ்மிரேகா, சந்தோஷ் பத்ராவுடன் சேர்ந்து வாழ்ந்தது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
ரஷ்மிரேகாவின் ம ர ண த்திற்கு அவரது லிவ்-இன் பார்ட்னர் தான் காரணம் என அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.
ஆனால் தனது ம ர ணத்திற்கு யாரும் காரணமில்லை என ரஷ்மி எழுதி வைத்துள்ளதால், இது த ற் கொ லை தான் என்ற முடிவுக்கு வந்திருக்கும் காவல்துறையினர் பி ரே த பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.