தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இமான்.தற்போது உச்சத்தில் உள்ள அனிருத் யுவனுடன் போட்டிபோடா விட்டாலும் தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு ரசிகர்களை தன்வசம் இழுத்துள்ளார்.சமீபகாலமாக இவரது தனிப்பட்ட வாழ்க்கை ஒரு பேசுபொருளாக அமைந்துள்ளது.
தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தபின்னர், அமலி உபால்டு என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.இதனிடையே, முதல் மனைவியை திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தன் மனைவியைப் பிரிந்தார் இமான்.
அமலியின் மகள் நேத்ராவை இனி தனது மூன்றாவது மகளாக ஏற்றுக்கொள்வதாகவும் தனது மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெசிகாவை மிகவும் மிஸ் செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இமானின் முதல் மனைவியான மோனிக்கா தற்போது கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். அதில், டியர் இமான்.. இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள்,
12 ஆண்டு காலம் உங்களுடன் வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால், உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.
கடந்த இரண்டு வருடமாக உங்கள் சொந்த பிள்ளைகளை நீங்கள் பார்க்கவும் இல்லை. கவனிக்கவும் இல்லை. ஆனால், அவர்களுக்கு பதில் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
மேலும், உங்கள் அப்பாவிடம் இருந்து என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துக்கள் என தெரிவித்து இருக்கிறார்.